அவளது கண்ணீர்…

தூரங்கள் துன்பம் தரவில்லை,
அருகாமை இன்பம் தரவில்லை,
நினைவுகள் நிதர்சனமாகவில்லை,
கனவுகள் கைக்கூடவும் இல்லை,
ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,
அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,
கற்பனையில் தோன்றி,
கண்ணீரில் கரைந்து போகும்
அவளது காதல் காவியம் இது…