அவளது கண்ணீர்…

தூரங்கள் துன்பம் தரவில்லை,
அருகாமை இன்பம் தரவில்லை,
நினைவுகள் நிதர்சனமாகவில்லை,
கனவுகள் கைக்கூடவும் இல்லை,
ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,
அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,
கற்பனையில் தோன்றி,
கண்ணீரில் கரைந்து போகும்
அவளது காதல் காவியம் இது…

நிலா🌕

எரியும் சூரியனின் தீயும் தேனாய் மாறும் நீ வரும் நேரத்தில்!

கரு வானத்தில் புள்ளி வைத்து கோலமிட்டன நட்சத்திரங்கள்!

விளக்கேற்றி ஆனந்தத்தில் ஆரவாரம் செய்தன மின்மினி பூச்சிகள்!

உன் வருகையை தம்பட்டம் அடித்தது ஆந்தையின் அலறல்!

மயில் தோகை போன்ற மாலை தென்றல் உன்னை வரவேற்க உற்சாகமாக காத்துக் கொண்டு இருக்கிறது!