அவளது கண்ணீர்…

தூரங்கள் துன்பம் தரவில்லை,
அருகாமை இன்பம் தரவில்லை,
நினைவுகள் நிதர்சனமாகவில்லை,
கனவுகள் கைக்கூடவும் இல்லை,
ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,
அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,
கற்பனையில் தோன்றி,
கண்ணீரில் கரைந்து போகும்
அவளது காதல் காவியம் இது…

	

பூக்களின் மொழி

உன் மொழியை அறிய முற்பட்டேன்…

உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…

புரிந்து கொண்டேன்…

உன் மொழிக்கு,

வார்த்தை இல்லை!

சத்தம் இல்லை!

ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!

நிலா🌕

எரியும் சூரியனின் தீயும் தேனாய் மாறும் நீ வரும் நேரத்தில்!

கரு வானத்தில் புள்ளி வைத்து கோலமிட்டன நட்சத்திரங்கள்!

விளக்கேற்றி ஆனந்தத்தில் ஆரவாரம் செய்தன மின்மினி பூச்சிகள்!

உன் வருகையை தம்பட்டம் அடித்தது ஆந்தையின் அலறல்!

மயில் தோகை போன்ற மாலை தென்றல் உன்னை வரவேற்க உற்சாகமாக காத்துக் கொண்டு இருக்கிறது!

இயற்கையில் பிரியா வரம் பெற்றவை✨

காற்றில் இணைந்த இசை!

மண்ணோடு மறைந்த மழை!

நாவோடு சேர்ந்த சுவை!

இரவோடு இணைந்த இருள்!

முகிலோடு கலந்த காற்று!

வானவில்லோடு பிணைந்த வண்ணம்!

உயிரில் கரைந்த மூச்சு காற்று!

நேரம்⏳🕛

அறிமுகமான அதே நொடியில் அந்நியனாய் பிரிந்து சென்றாய்…

இணைந்த தருணத்தில் இணையா வரத்தை கொடுத்து சென்றாய்…

தொடர்பில்லாத தோழன்!

எதிர்ப்பில்லாத எதிரி!

உறவாடாத உறவு!