நிலவைக் கொண்டு விளக்கு செய்து…
மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…
நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…
கண்டேன் இரவின் அழகை!

நிலவைக் கொண்டு விளக்கு செய்து…
மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…
நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…
கண்டேன் இரவின் அழகை!

எரியும் சூரியனின் தீயும் தேனாய் மாறும் நீ வரும் நேரத்தில்!
கரு வானத்தில் புள்ளி வைத்து கோலமிட்டன நட்சத்திரங்கள்!
விளக்கேற்றி ஆனந்தத்தில் ஆரவாரம் செய்தன மின்மினி பூச்சிகள்!
உன் வருகையை தம்பட்டம் அடித்தது ஆந்தையின் அலறல்!
மயில் தோகை போன்ற மாலை தென்றல் உன்னை வரவேற்க உற்சாகமாக காத்துக் கொண்டு இருக்கிறது!
