
பிரியா உணர்வுகளை போல்
மண்ணில் வீழ்ந்தும்
உன் மணம் மனதை விட்டு
அகல மறுக்கிறது!

நிலவைக் கொண்டு விளக்கு செய்து…
மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…
நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…
கண்டேன் இரவின் அழகை!

எத்தனை முறை பிரிந்தாலும்…
மீண்டும் மீண்டும் கரையோடு சேர துடிக்கும்…
கடலின் விடாமுயற்சி!

காற்றில் இணைந்த இசை!
மண்ணோடு மறைந்த மழை!
நாவோடு சேர்ந்த சுவை!
இரவோடு இணைந்த இருள்!
முகிலோடு கலந்த காற்று!
வானவில்லோடு பிணைந்த வண்ணம்!
உயிரில் கரைந்த மூச்சு காற்று!