
பிரியா உணர்வுகளை போல்
மண்ணில் வீழ்ந்தும்
உன் மணம் மனதை விட்டு
அகல மறுக்கிறது!

நிலவைக் கொண்டு விளக்கு செய்து…
மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…
நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…
கண்டேன் இரவின் அழகை!

உன் மொழியை அறிய முற்பட்டேன்…
உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…
புரிந்து கொண்டேன்…
உன் மொழிக்கு,
வார்த்தை இல்லை!
சத்தம் இல்லை!
ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!
